துபாயில் உள்ள முகம்மது பின் ராஷித் நூலகம், துபாயினும் பெரிய உலகம். பிழைப்புத் தேடி வளைகுடா நாடுகளுக்கு வரும் எத்தனையோ வெளி நாட்டினர், தமது அடையாளத்தை மீட்டெடுக்க நாடும் புகலிடங்களுள் இதுவே முதன்மையானது.
உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும், அனைத்து மொழிகளிலிருந்தும் எண்ண இயலாத எண்ணிக்கையில் அங்கே குவிந்து கிடக்கும் புத்தகங்களை அவர்கள் படிக்கும்போது, அவர்களைப் படித்துப் பெற்ற அனுபவங்களையும் தகவல்களையும் இந்நூலில் சேமிக்கிறார் நஸீமா ரஸாக்.
அண்டார்டிகா தவிர உலகின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் துபாய்க்கு வேலை தேடி வருவோர் எப்போதும் உண்டு. இந்நூலகத்தில் தங்கள் வேர்கள் இருக்கின்றனவா என்று தேடி வரும் அவர்களின் வழியே நாம் அறிந்த நாடுகளின் அறியாத முகங்களை அறிமுகம் செய்கிறார் ஆசிரியர்.
Be the first to rate this book.