நோயாளிகளின் உணவு பழக்கம் என்ன? உணவு நேரம் என்ன? புகை, மது பழக்கம் உண்டா? இருந்தால் தொடராதே என்று எந்த மருத்துவரும் வலியுறுத்துவதில்லை. மாறாக வேண்டுகோள் வைக்கிறார்கள்.
அதற்கு காரணம், அவ்வாறு வலியுறுத்தினால், நோயாளிகள் மருத்துவரை மாற்றி விடுவார்கள். உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச் செல்பவன் என அப்பால் நாற்கூற்றே மருந்து என்ற குறள் அறியாமல் இருக்கிறோம்.
உணவே மருந்து மருந்தே உணவு என்பதுதான் இந்த நூலின் பேசுபொருள். ஆனால் நாகப்பன் அவர்கள் பல்வேறு ஆய்வு அறிக்கைகளின் மூலமும் புள்ளிவிவரக் கணக்குகளின் மூலமும் அதை நமக்கு எந்தச் சந்தேகமும் இல்லாமல் எடுத்து வைப்பது இந்த நூலில் சிறப்பு.
நம் வாழ்க்கைக்கு நேரடி தொடர்பில்லாத எத்தனையோ துறைகள் பற்றி எத்தனையோ புத்தகங்கள் படிக்கிறோம். ஆனால் நாம் தினசரி உண்ணும் உணவு பற்றி எத்தனை அறிந்திருக்கிறோம்? இந்த புத்தகத்தின் மூலம் நூலாசிரியர் நாகப்பன் சூரிய நாராயணன் நமக்கு அந்த வாய்ப்பை சுவாரசியத்தோடு வழங்கியிருக்கிறார் என்பதுதான் இந்தப் புத்தகத்தை முழுவதுமாய் நம்மைப் படித்து முடிக்க வைக்கிறது.
ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் அந்தக் கட்டுரை எழுத உதவிய மருத்துவ அறிக்கைகளையும் புத்தக பட்டியல்களையும் இணைத்து இருப்பது கூடுதல் சிறப்பு.
-இயக்குனர் கரு. பழனியப்பன்
Be the first to rate this book.