தொடர்ந்து சிறார்களுக்கான கதைகளை எழுதிவரும் கதை சொல்லி சரிதா ஜோ எழுதியுள்ள இக்கதை, குழந்தைகளுக்கு இயற்கை மீதான அன்பையும் சிறார்களின் உலகையும் மிகைப்படுத்தாமல் இயல்பாகக் காட்டியுள்ளது.
குழந்தைகளிடம் மட்டுமே விலங்குகள், பறவைகள், மரங்கள் என உயிருள்ளவையும் உயிரற்றவையும் பேசுகின்றன. இதையே குழந்தைகளால் மட்டுமே எல்லாவற்றிடலும் பேச இயலும் என்றும் சொல்லலாம்.
ஈரோட்டைச் சேர்ந்த கதைசொல்லி சரிதா ஜோ,உளவியல், தமிழ், கல்வியியல் ஆகிய துறைகளில் முதுநிலைப் பட்டமும், தற்காப்புக் கலையான குங்ஃபூவில் கறுப்புப் பட்டையும் பெற்றுள்ளார். கதை சொல்லியாகவும் சிறார் எழுத்தாளராகவும் வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பட்டிமன்றப் பேச்சாளராகவும் மிளிர்கிறார்.
'ஸ்கேன் ஃபவுண்டேஷன் இந்தியா விலங்குகள் நல அமைப்பின் தூதுவராக இருக்கிறார். தமிழ்நாடு கலை இலக்கிய மேடையின் அசோகமித்திரன் நினைவு படைப்பூக்க விருதும் திருப்பூர் சக்தி விருதும் பெற்றுள்ளார். மந்திரக் கிலுகிலுப்பை இவருடைய முதல் சிறார் நாவலாகும்.
Be the first to rate this book.