ஒருதலைப்பட்சமான துயர், பாகுபாடான வறுமை, மறுதலிக் கப்படும் சமத்துவம் - என்ற மூன்று பக்கங்களால் உருவாகி யுள்ள இந்த முக்கோணச் சமூகம் நோய்மையிலுள்ளது. இங்கு கடவுள்கூட சுகவீனமாயிருக்கிறார். காரணம், இந்த முக்கோணத்தின் மையம் சாதியாகவே உள்ளது என்பதைத் தான் இந்தப் பிரதி வெவ்வேறு வகையில் சொல்லிச் செல்கிறது.
ஒரு கவிதையில் நடராஜன் பெருமாள் சொல்வார், 'வரிகளின் உயிர், அதன் அர்த்தங்கள்தான்' என்று. அர்த்தங்கள் என்பன, அவரவர் வாழ்வின் போக்கும் ருசியும் அனுபவமும் தருவனதானே? அவ்வகையில் 'நினைவுச் சருகினில் ஓடும் அணில்' என்ற இந்தக் கவிதைத் தொகுப்பு வாசகனுக்குப் புதுப்புது அர்த்தங்களை நிச்சயம் தரும்.
மொத்தத்தில், தத்துவக் கவிஞர் குடியரசும் போராட்டக் கவிஞர் இன்குலாபும் வேறு குரலில் இந்தப் பிரதியில் உலவியபடி பேசுவதாகத் தோன்றுகிறது.
-அமிர்தம் சூர்யா எழுத்தாளர், பத்திரிகையாளர்
Be the first to rate this book.