வளவனுக்கு ஓய்வு நேரத்தில், கதைப் புத்தகம் வாசிப்பது மிகவும் பிடிக்கும். ஒருநாள் அவன் ஓர் ஆங்கிலக் கதையை வாசித்தான். அந்தக் கதையில் ஒரு சிறுவனுக்குப் பல் விழுந்துவிடும். அவன் விழுந்த பல்லை எடுத்துத் தூங்கப் போவதற்கு முன்,தலையணைக்குக் கீழே வைப்பான்.
நடுஇரவில் ஒரு தேவதை வந்து, அதை எடுத்துக்கொண்டு, அதற்குப் பதிலாக ஒரு தங்கக்காசு வைக்கும். அவன் காலையில் எழுந்து ஆவலுடன் தலையணையைத் தூக்கிப் பார்ப்பான். அங்கே மின்னுகிற ஒரு தங்கக்காசு இருக்கும்.
சிறார் எழுத்தாளர். சிறுவர்களுக்குக் கதை கட்டுரைகள் எழுதுவதோடு, கணிதக் கட்டுரைகளையும் எழுதி வருபவர். கணித ஆர்வலர். சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிகிறார். எம்.டெக் பட்டதாரி. கணிதம் கற்பிப்பதில் உள்ள சவால்களை ஒட்டி தமிழகம் எங்கும் பேசியும் பயிற்றுவித்தும் வருகிறார்.
Be the first to rate this book.