யாராலும் தவிர்க்க முடியாத பால்ய கால நினைவுகளைத் தாங்கி வரும் சிறுகதைகளின் தொகுப்பு. தான் வாழ்ந்த ஊரின் நினைவுகளை, அங்கே நடந்த நிகழ்வுகள் தரும் விவரிக்க முடியாத உணர்வுகளை இந்தக் கதைகளின் மூலம் நம் அனைவருக்குள்ளும் கடத்துகிறார் ஆமருவி.
பழைய பள்ளிகள், நம் நினைவைச் சுமக்கும் சாலைகள், சூதுவாது அற்ற அந்தக் கால மனிதர்கள், இன்று எங்கோ நகர்ந்து வந்துவிட்டாலும் இன்று வரை மறக்க முடியாத அந்த வாசனை என நாம் அனைவரும் மீண்டும் அனுபவிக்க விரும்பும் அனைத்தையும் இந்தக் கதைகள் உள்ளார்ந்த பகடியோடும் கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சியோடும் சொல்கின்றன.
நம் ஒவ்வொருவரையும் நம் பழங்காலத்துக்கு அழைத்துச் செல்லும் நூல்.
Be the first to rate this book.