இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், நமக்கு இல்லாதது நேரமல்ல; கவனமே. எல்லாம் தெரிந்ததுபோல் தோன்றும் காலத்தில், முக்கியமானவற்றைத் தவறவிடும் அபாயமே அதிகம். அந்த இடைவெளியை நிரப்ப, தேவையற்ற விரிவுகளை விலக்கி, சொல்ல வேண்டியதை நேரடியாகச் சொல்வதற்காக உருவான நூலே நேர்படப் பேசு.
அவசர உலகில் அவசியமான சிந்தனைகளைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லும் இந்தப் புத்தகம், வாசித்துவிட்டு வைக்கக்கூடியதல்ல; வாழ்க்கையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய ஒன்று.
தேவகோட்டையைச் சேர்ந்த டாக்டர் சோம வள்ளியப்பன் அள்ள அள்ளப் பணம் (10 பாகங்கள்), இட்லியாக இருங்கள் (5 புத்தகங்கள்), ஆளப்பிறந்தவர் நீங்கள், நாட்டுக்கணக்கு (2) உள்பட தமிழில் 82 புத்தகங்களும், ஆங்கிலத்தில் மூன்று புத்தகங்களும் எழுதியிருக்கிறார். You Vs You புத்தகத்துக்காகப் புகழ்பெற்ற ISTD பரிசு பெற்றவர். தமிழ்நாடு அரசின் சிறந்த எழுத்தாளர் பரிசு, கவிதை உறவு பரிசு, நெய்வேலி புத்தகக் காட்சி சிறந்த எழுத்தாளர் பரிசு, பாரதி தமிழ் இலக்கிய பேரவை பரிசு, சிறுகதைக்கான இலக்கிய பீடம் பரிசு ஆகியவை இவரது எழுத்துகளுக்கான அங்கீகாரங்களில் சில. எமோஷனல் இன்டெல்ஜென்சில் ஆறு ஆண்டுகள் ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.எச்டி. பட்டம் பெற்றதுடன், NF NLP, USA யின் 'நியுரோ லிங்விஸ்டிக் புரோகிராம்'-ன் சர்டிஃபைடு மாஸ்டர் பிராக்டிஷனராகவும் இருக்கிறார். மனித வளத்துறையில் BHEL, பெப்சிகோ, வேர்ல்பூல் உள்ளிட்ட நிறுவனங்களில் 25 ஆண்டுகாலம் பணியாற்றிய இவர் இப்போது பல்வேறு நிறுவனங்களுக்கு நிர்வாக ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.
Be the first to rate this book.