ஆரியம் தனது ஆதிக்கத்தை வெகுஜன மக்களின் மனங்களில் இறைநம்பிக்கை என்ற பெயரில் புராண இதிகாசக் கதைகள் (புரட்டுக்கள்) வழியாக வேரூன்றச் செய்தது. அந்த வேர்களை, பகுத்தறிவு என்னும் கூர் அறிவாளால் வேரறுக்க போறிஞர் பெருந்தகை அண்ணா மேற்கொண்ட அறிவுப் போராட்டத்தின் வெளிப்பாடாக உருவானதே. 'நீதி தேவனின் மயக்கம் என்ற நாடக நூல்
அந்நாள் வரை கதாநாயகர்களாகவும், புராணம் போற்றும் புனிதப் பாத்திரங்களாகவும், கோயில்களில் நிறைந்திருக்கும் சிலைகளாகவும் இருந்த கோட்புலிநாயனார். விஸ்வாமித்திரர். துரோணாச்சாரி. பரசுராமன், அக்னி தேவள். இராமன் போன்றவர்களின்மீது கட்டமைக்கப்பட்டிருந்த இறைநம்பிக்கையாலாள புனிதப் பிம்பங்களை உடைத்து. உண்மை என்ன என்பதைத் தனது தனித்துவமான அறவியல் நோக்கோடு எழுத்து வடிவில் அமைத்துள்ளார் அண்ணா.
கவிச்சக்கரவர்த்தி எனப் புகழப்படும் கம்பனின் கம்பராமாயணத்தில் மறைக்கப்பட்டிருந்த கசடுகளையெல்லாம் நம் கண்முன்னே காட்சிப்படுத்துகிறார்.
பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை (15 செப்டம்பர் 1909 -3 பிப்ரவரி 1969), திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனர் மற்றும் முதல் பொதுச் செயலாளர். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது மாநிலக் கட்சித் தலைவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார். பெரியாரின் சீடர், சமூக மாறுதலை தன் எழுத்தின் மூலம் முன்னெடுத்துச் சென்றவர். எழுத்து, பேச்சு, நாடகம், புதினம், திரைப்படம் என பல துறைகளில் சாதனை செய்தவர்.
Be the first to rate this book.