பார்ப்பனர் அல்லாத மக்களின் கல்வி வேலை குறித்து கவலை கொண்டு முதன் முதல் திராவிடர் சங்கம் கண்டு 1912இல் சென்னையில் திராவிடர் இல்லம் அமைத்து பல இளைஞர்கள் தங்கிப்படித்து மேலேவர தூணாய் நின்றவர் மருத்துவர் சி. நடேசன் ஆவார். பார்ப்பனர் அல்லாதாரின் நலனுக்காக தன்னையே ஈந்த பெருந்தலைவர்களாக விளங்கிய சர்.பி.தியாகராயர், டி.எம்.நாயர் ஆகியோருடன் 1916 ஆம் ஆண்டு நீதிக்கட்சியை பி.டி.ராசன் உள்ளிட்ட பலரை இணைத்துத் தொடங்கினர்.
கட்சி தொடங்கி நான்கு ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்த நீதிக்கட்சி பார்ப்பனர் அல்லாத மக்களின் நலன்களை மீட்டு இந்தியாவிற்கு தென்னகம் வழிகாட்டியாய் அன்றே விளங்கி உள்ளது.
திராவிடத்தந்தை டாக்டர் சி.நடேசன், சர்.பி.தியாகராயர், தமிழவேள் பி.டி.இராசன், சிந்தனை சிற்பி சிங்கார வேலர், அஞ்சாநெஞ்சன் அழகிரி உள்ளிட்டவர்களின் வாழ்க்கை சுருக்கத்தை உணர்வு மேலிட காய்த்தல் உவத்தல் இன்றி எழுதி உள்ளார். தந்தை பெரியார் திராவிடர் கழகம் கண்ட பின்பும் பி.டி.ராசன் நீதிக்கட்சியைத் தொடர்ந்து நடத்தியமையும் அவருடன் அன்றைய தலைவர்கள் கொண்டிருந்த தோழமையும் இன்றைய தமிழகம் அறிய வேண்டிய வரலாறாகும்.
-காஞ்சிஅமுதன்
Be the first to rate this book.