இந்தப் புத்தகம் நீலகிரியின் வரலாற்றை விரிவாகச் சொல்கிறது. நீலமலைகளுக்கு கற்காலத்திலிருந்து வரலாறு உண்டு. பாறை ஓவியங்களின் வழியும், குகைக் கீறல்களின் வழியும் அதை அறிகிறோம். இந்த நூல், மலைகளில், சமவெளி மனிதன் ஏற எண்ணம் கொண்ட தருணத்திலிருந்து சொல்லப்படுகிறது. பிரிட்டிஷ் மலையைத் தங்களின் ஆட்சி அதிகாரத்திற்குள் கொண்டுவர எத்தனித்த காலத்திலிருந்து தொடங்குகிறது. மனிதர்களின் தடம் படாத கன்னி நிலங்கள், இன்று சுற்றுலா சொர்க்கமாக மாற்றியமைக்கப்பட்டதை விரிவாகச் சுவாரசியமாகச் சொல்கிறது.
இந்த நூலின் ஆசிரியர் சிவராமன் கணேசன் நீலகிரியில் வளர்ந்தவர். சிறுவயதிலிருந்தே நீலகிரியின் வரலாற்றில் ஆர்வம் கொண்டு ஆய்வு செய்து வருபவர்.
Be the first to rate this book.