வாழ்வின் முக்கியமான தருணங்கள் எது என என்னிடம் யாரேனும் கேட்டால் அது சில புத்தகங்களை நான் வாசித்த தருணங்கள்தான் என்பேன். அந்த தருணங்களை மட்டும் நான் சந்தித்திருக்காவிட்டால் இன்று வரையிலான என் வாழ்க்கை அதன் அர்த்தத்தையும் சாரத்தையும் பெருமளவு இழந்திருக்கும் என்று நம்புகிறேன். ஒரு நண்பனை போல என் தோள் மேல் கைபோட்டு மெல்ல ஆன்மாவின் ஆழத்துள் என்னை அழைத்துச் சென்று வார்த்தைகளின் துணையோடு என்னை மேலும் பண்படுத்தி மேலும் ஆழமிக்கவனாய் மாற்றிதந்திருக்கின்றன. அத்தகைய தருணங்களில் மனம் தன் அழுக்குகளையெல்லாம் கண்ணீரின் வழியாக என்னுள்ளிருந்து வெளியேற்றும். இப்படியாக என்னை இதர மனிதர்களிடமிருந்து வேறுபட்டவனாக மாற்றிய மிக முக்கியமான புத்தகங்களில் ஒன்றாக நான் கருதும் புத்தகம் வான்கோவின் வாழ்க்கை வரலாற்றை ஒட்டி இர்விங் ஸ்டோன் எழுதிய லஸ்ட் பார் லைஃப்.
Be the first to rate this book.