கடந்த முப்பது ஆண்டுகளாக எழுதிவரும் சு. வேணுகோபால் தமிழின் மதிக்கத்தக்க எழுத்தாளர் வரிசையில் தனித்து நிற்பவர். மேலான படைப்புகளைத் தந்திருப்பவர். அவரின் மிக முக்கியமான நூல் இது. நவீனத்தமிழ்த் திறனாய்வு இலக்கியத்திற்கு பெரும்பங்காற்றிய ஆளுமைகள் பற்றிய மிக விரிவான கட்டுரைகள் கொண்டவை. நவீனத் தமிழ் இலக்கியத்தை உன்னத இடத்திற்கு இட்டுச்சென்று நிறுத்திய க.நா.சு, சி. சு. செல்லப்பா, சுந்தர ராமசாமி, கோவை ஞானி, இவர்கள் குறித்த விரிவான ஆய்வுகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இலக்கியத்திற்கே ஒப்புவித்த இவர்களின் பணி இந்நூலில் கலங்கரை விளக்குகளாக இருக்கின்றன. திரும்பக்கிட்டாத இவர்களின் வரிசையில் எஸ். வி. ராஜதுரை, தமிழவன், சுஜாதா, பொதியவெற்பன், ஜெயமோகன் முதலானவர்கள் குறித்த கட்டுரைகளும் இருக்கின்றன. படைப்பாளியான சு. வேணுகோபால் இந்த கட்டுரைகளின் வழி அவர்களின் இலக்கிய கொந்தளிப்பை நம் முன் நிறுத்தியிருக்கிறார்.
Be the first to rate this book.