கார்ல் மார்க்ஸ் பிறந்த இருநூறாம் ஆண்டு நினைவையொட்டி தொடங்கிய மொழியாக்க முயற்சிகளின் விளைவாக உருவான இந்நூல், தற்கால அரசியல், சமூக, சூழலியல் நெருக்கடிகளை மார்க்சியக் கண்ணோட்டத்தில் அணுகுகிறது. சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்து டெட் பென்டனின் சிந்தனை, சூழலியல் மார்க்சிய சிந்தனைகளுக்காக அறியப்படும் ஜான் பெல்லாமி பாஸ்டரின் எழுத்துகள், அமெரிக்காவின் இனவெறி முதலாளிய அமைப்பை விமர்சிக்கும் கட்டுரை, உக்ரைன் போரை எதிர்த்து நோம் சாம்ஸ்கி வழங்கிய நேர்மையான பேட்டி, எங்கெல்ஸ் குறித்து டோனி கிளிஃப் ஆற்றிய சொற்பொழிவு என நவீன முதலாளித்துவம் உருவாக்கிய சூழலியல் அழிவு, இனவெறி. போர் அரசியல் ஆகியவற்றை மார்க்சியத்தின் வெளிச்சத்தில் புரிந்துகொள்ள முயலும் வாசகர்களுக்கான முக்கியமான மொழியாக்கத் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.
Be the first to rate this book.