'திங்களைச் சமைப்பவள்' மழையேந்தி நிற்கிறாள். மெய் மறக்கையில் பெய்யும் மழையை வரம் என்று அறிவிக்கிறாள். இவளை மெல்ல வந்து நனைக்கிறது ஒரு ரகசிய மழை. நாமெல்லாம் மலைத்து நிற்போம்; ஆனால், இவள் மழைத்து நிற்கிறாள். மழையுடன் விளையாடி, மழையுடன் உரையாடி, மழையைப் பருகி, மழையை மோகித்து அடுத்த பருவமழைக்குக் காதலுடன் காத்திருப்பவளை 'மழையோடு வசிப்பவள்' என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது? ஆனாலும் இவள் 'இல்லிருத்தல் முல்லை' என்ற மரபிலக்கணத்திற்குக் கட்டுப்பட்டவள் அல்ல! உரிப்பொருளிலும் புதுக்கவிதை!
இத்தொகுப்பு கலப்படம் ஏதுமற்ற அகத்திணை இலக்கியம் என்பதற்கு பொழிப்புரை எதுவும் தேவையில்லை.
-ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப(ஓய்வு),
சிந்துவெளி ஆய்வாளர்
தலைவர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
Be the first to rate this book.