தமிழரின் விறுவிறுப்பான சல்லிக்கட்டைப் போன்றே, வட தமிழகத்தில் எருதாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்று வந்த 'வங்கா நரி சல்லிக்கட்டும் மிக முக்கியமான அறுவடைத் திருவிழாக்களில் ஒன்று.
தமிழகம் முழுவதும் வனப்பகுதி ஒட்டிய மேய்ச்சல் நிலங்கள், குறுங்கரடுகள், வயல்வெளிகள் என விவசாய நிலங்களோடு ஒட்டி வாழ்ந்து வந்த நரிகள் இன்று காணாமல் போய்விட்டன. இதற்கு வங்க நரியை குலதெய்வமாக வழிபடும் 'நரி விடுகிற' மக்களின் கலாச்சாரம் மட்டுமே காரணமில்லை. நவீன முறைகளுக்குத் தள்ளப்பட்டு இன அழிவை ஏற்படுத்தியிருக்கும் நாம்தான் காரணம். காக்கத் தவறிய வனத்துறை முதலிய அரசுத் துறைகளுக்கும் இதில் பெரும் பங்குண்டு. விளிம்பு நிலையில் இருக்கும் உயிரினங்களை மீட்க அக்கறையான மொழியில் எச்சரித்திருக்கிறார் சீசரித்திருக்கிறார் எழுத்தாளர் நவி.
Be the first to rate this book.