மிக எளிமையானது சமயங்களில் மிகச் சாதாரணமானது என்று தோன்றக்கூடியதுமான எனது கவிதைகள், இயற்கையைப் போலவே-ஆணோ பெண்ணோ எவரானாலும் முதலில் அவர்களின் புலன் நுகர்ச்சிகளை ஈர்ப்பதற்கான ஒரு தூண்டில் முள்தான். அது மிகப் பெரிய ஒரு மீனைப் பிடிப்பதற்கான ஒரு தூண்டில் முள்தான். உள்ளதும், ஒன்று என்பதும்தான் அந்த மிகப் பெரிய மீன்.
அறிவு தனக்குரிய இடத்தைவீட்டு வெளியே தன் மூக்கை நுழைத்திருக்கும் போதெல்லாம்தான் ஆபத்தான ஒன்றாக மாறிவருகிறது என்பதைத்தான் நாம் மிகமிக முக்கியமாகத் தெரிந்திருக்க வேண்டும். கவிதையின் மதம் உலாவும் கடவுளின் ராஜ்ஜியத்தை இந்த உலகில் நாம் நிறுவுவதற்கு இந்த ஒன்றைத் தவிர வேறு வழியே கிடையாது என்பதை நான் உறுதியாகச் சொல்வேன்.
Be the first to rate this book.