சிரமமான சூழ்நிலையில் நடந்த தபூக் யுத்தத்திற்குச் செல்லாமல் பின்வாங்கிய பலர் மதீனாவில் இருந்தனர். அவர்களுள் பெண்கள், சிறுவர்கள், நோயாளிகள் என நியாயமான காரணம் கொண்டவர்களும், அத்தகைய காரணங்களேதும் இல்லாத நயவஞ்சகர்களும் இருந்தனர். இவர்களல்லாது மூன்று நபித்தோழர்கள் எவ்வித நியாயமான காரணங்களுமின்றி யுத்தத்திற்குச் செல்லவில்லை. அதற்காக அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பெற்றது. சுமார் அறுபது நாள்கள் அவர்கள் ‘நடமாடும் சிறைச்சாலை’யில் வாடினர். அந்நிகழ்வை உள்ளத்தைத் தொடும் இலக்கியமாக மாற்றித் தருகிறது இக்குறுநாவல்.
Be the first to rate this book.