மாறுவேடப் போட்டிக்கு
திருடனைப் போல
வேடமிட்டு வந்தவனை
எல்லோரும் பாவமாக
பார்த்ததின் விளைவு திருடனின்
அடையாளம் மாறிவிட்டதோ
என யோசித்தவன் சட்டென
வேடத்தைக் கலைத்து தனக்குக்
கொடுக்கப்பட்ட நேரத்தில்
அழுத்தம் திருத்தமாக தன்
வாய்க்கு வந்த பொய்களை
சத்தமாக சொல்லத் தொடங்கினான்.
வியப்பு என்னவென்றால்
பலத்த கரகோசத்திற்கு
இடையில் தேசபக்தராக
முதல் பரிசைப் பெற்றான்.
Be the first to rate this book.