ஒரு கதைசொல்லியின் பிரகடனம்.
தமிழ்ச் சிறுகதை மரபில் அடங்காத இந்தச் சிறுகதைகள் பல இடங்களில் பிரச்சாரமாக, தத்துவ விவாதமாக, அறிவிப்பாக, சட்டத்திட்ட மீறல்களோடு பிரகடனமாக இருப்பதை உணரமுடிகிறது.
மலை உச்சி நோக்கி கஷ்டப்பட்டு ஏறி அடையும் ஓவ்வொருவனும்/ளும் ஒரு முறையாவது ‘ஆ’ வென தன் கால்களுக்குக் கீழிருக்கும் உலகம் பார்த்து அலறாமல் இருப்பதில்லை. அந்த
‘ஆ’ என்பது பயமில்லை... பதற்றமில்லை... படப்படப்பில்லை. தயக்கமோ தவிப்போயில்லை. அதுவொரு பிரகடனம். இனி மலை உச்சியை அடைவது குறித்து நீங்கள் எங்களுக்குப் பாடம் நடத்த தேவையில்லை. அந்த ஞானத்தை நாங்கள் மீளப் பெற்றுவிட்டோம். அதை எங்கள் பின்வரும் தலைமுறைக்குக் கடத்திக்கொள்வோம் என்ற ஒரு பிரகடனம். மு.து.பிரபாகரனின் இந்த அறிவிப்பு அவரின் காலடிக்குக் கீழிருக்கும் உலகத்திற்கு கேட்கும்.
அன்புடன்
சி.ஜெரால்டு
இயக்குநர் - திரைக்கதையாளர்.
Be the first to rate this book.