இ.பா.சிந்தன் இந்த நூலில் மிக ஆழமாக, கியூபா வரலாற்றின் சுவடுகளை தொடர்ந்து, அவர்களின் போராட்டங்களை தர்க்க ரீதியாக ஆராய்ந்து நமக்களித்துள்ளார். அமெரிக்காவின் ஒடுக்குமுறையால் சமரசம் செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்ட நாடுகளைப்பற்றி குறிப்பிட்டு, எந்நாளும் அந்நிலைக்கு கியூபா போகப்போவதில்லை என்று ஒப்பீடு செய்து சொல்லும்பொழுது, பிடிவாதமாக எதிர்த்து நிற்கும் கியூபாவைப் பற்றியும், அம்மக்களின், தலைவர்களின் உறுதியை பற்றியும் அழுத்தமாக பதிந்திருக்கிறார்.
Be the first to rate this book.