காதல் மதமான மன்மதமே உலகின் ஆதி மதம். மதத்திற்கு எதிரானவர்களையும் இந்த மதம் இனிதாய்த் தழுவிக்கொள்கிறது. காதலின் கூதிர்காலத்தை அனுபவிக்கிறவர்கள், மு.முருகேஷ் அவர்களின் இந்த இளங்கவிதைகளைக் கண்களால் அள்ளியெடுத்து இதயத்தில் ஒத்திக்கொள்ளலாம். கவிதைகளில் மட்டுமல்லாது மு.முருகேஷ், காதலிலும் வல்லவர் என்று இதிலுள்ள கவிதைகள் உற்சாகமாய்ச் சொல்கின்றன. கூடவே இங்கே ஓர் இதயத் திருவிழாவையும் நடத்துகின்றன.
ஆரூர் தமிழ்நாடன்
Be the first to rate this book.