மதுரை, டாக்டர் புலவர் வை.சங்கரலிங்கனார் அவர்கள் தமிழகம் அறிந்த பண்பாளர். ஆசிரியப் பணியில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வழிகாட்டியவர். மாணவர்களின் ஒளிவிளக்காக திகழ்ந்தவர். இவருடைய உரை கேட்டு உற்சாகம் பெறுபவர்கள் பலர். தன்னைப்போலவே அடுத்தவர்களையும் உற்சாகப்படுத்தி உயர வைக்கவேண்டும் என்ற உயர்ந்த உள்ளம் கொண்டவர்.
எல்லா முதல்வர்களுக்கும் ‘மக்களின் முதல்வர், மக்களுக்காகவே முதல்வர்' என்ற அடைமொழிகள் எல்லாம் பொருந்தாது. மிகச் சிலருக்கே இவை பொருத்தமுடையதாக இருக்கும். அவர்களுள் ஒருவர் ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் என்று உறுதியாகக் கூறமுடியும். ஓமந்தூராரின் ஆட்சியில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த மிக முக்கியமான சட்டங்கள்; ஆலய நூழைவுச் சட்டம், ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டம், இந்து சமய அறநிலையச் சட்டம் மற்றும் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் ஆகியனவாகும். ஏழை, எளிய மக்களைக் கவனத்தில் கொண்டு ஆட்சி நடத்திய ஓமந்தூரார் தன்னுடைய பதவிக்காலத்தில் தான் நோய்வாய்ப்பட்டபோது, அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அப்போது அவர், "மற்றவர்களுக்கு எப்படிப்பட்ட மருத்துவம் அளிக்கப்படுகிறதோ அதே மருத்துவம்தான் எனக்கும் அளிக்க வேண்டும். தனிப்பட்ட சலுகைகளோ கவனிப்போ எனக்குத் தரக் கூடாது. வெளிநாட்டிலிருந்து மருத்துவர் மற்றும் மருந்துகளை வரவழைக்கக் கூடாது' என்றும் நிபந்தனைகளை விதித்தார். ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதிலும் அவர் ஏழை, எளிய மக்களுள் ஒருவராகத்தான் மனத்தாலும் உடலாலும் வாழ்ந்தார்.
தமிழ்ச்செம்மல், நல்லாசிரியர், புலவர்
-முனைவர் வை.சங்கரலிங்கனார்
Be the first to rate this book.