டிஜிட்டல்மயமான இன்றைய காலத்திலும் கூட பலருக்கும் முதலீடுகள் செய்யும் வழிகள் பற்றிய புரிதல்கள் இல்லை. பாதுகாப்பாக முதலீடு செய்வது எப்படி, பங்குச் சந்தைப் போக்குகள் குறித்த விளம்பரங்களைத் தாண்டிய உண்மை நிலவரம் என்ன போன்றவற்றிலும் புரிதல் இல்லை. இவற்றில் எல்லாம் ஆழம் தெரியாமல் காலைவிட்டு சிக்கலில் மாட்டிக்கொள்பவர்களையும் நாம் அன்றாடம் பார்க்கிறோம். விவரம் அறிந்தவர்களே இவற்றில் எல்லாம் விழுந்துவிடுகிறார்கள் என்பதுதான் சோகம்.
சோம. வள்ளியப்பனின் ‘முதலீடுகள்’ எனும் இந்நூலில் சொத்துகள், கிரிப்டோ கரன்சிகளில் முதலீடுகள், ரிசர்வ் வங்கியின் தங்கப் பத்திரம், மாநில அரசின் பாண்டுகள் வரையுள்ள பல்வேறு முதலீடுகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. இத்தகைய பல்வேறு ஆலோசனைகளும் நிறைந்த இந்நூல் முதலீடு செய்பவர்களுக்கான ஒரு சிறந்த வழிகாட்டி நூல் என்பதில் ஐயமில்லை.
தேவகோட்டையைச் சேர்ந்த டாக்டர் சோம வள்ளியப்பன் அள்ள அள்ளப் பணம் (10 பாகங்கள்), இட்லியாக இருங்கள் (5 புத்தகங்கள்), ஆளப்பிறந்தவர் நீங்கள், நாட்டுக்கணக்கு (2) உள்பட தமிழில் 82 புத்தகங்களும், ஆங்கிலத்தில் மூன்று புத்தகங்களும் எழுதியிருக்கிறார். You Vs You புத்தகத்துக்காகப் புகழ்பெற்ற ISTD பரிசு பெற்றவர். தமிழ்நாடு அரசின் சிறந்த எழுத்தாளர் பரிசு, கவிதை உறவு பரிசு, நெய்வேலி புத்தகக் காட்சி சிறந்த எழுத்தாளர் பரிசு, பாரதி தமிழ் இலக்கிய பேரவை பரிசு, சிறுகதைக்கான இலக்கிய பீடம் பரிசு ஆகியவை இவரது எழுத்துகளுக்கான அங்கீகாரங்களில் சில. எமோஷனல் இன்டெல்ஜென்சில் ஆறு ஆண்டுகள் ஆய்வு செய்து, சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.எச்டி. பட்டம் பெற்றதுடன், NF NLP, USA யின் 'நியுரோ லிங்விஸ்டிக் புரோகிராம்'-ன் சர்டிஃபைடு மாஸ்டர் பிராக்டிஷனராகவும் இருக்கிறார். மனித வளத்துறையில் BHEL, பெப்சிகோ, வேர்ல்பூல் உள்ளிட்ட நிறுவனங்களில் 25 ஆண்டுகாலம் பணியாற்றிய இவர் இப்போது பல்வேறு நிறுவனங்களுக்கு நிர்வாக ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.
Be the first to rate this book.