1000 வருடங்களுக்கு முன்பு. ஒருவர் ரோபோவை தயாரித்திருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இன்றைய வாகனங்கள் இயக்க இவரின் கண்டுபிடிப்புகள் முக்கிய காரணம் என்பதை எங்கேனும் கேள்விப்பட்டுள்ளீர்களா? அவர்தான் அல் ஐசாரி.
தானியங்கி இயந்திரங்களின் நாயகன். இடைக்கால ரோபோட்டுகளின் தந்தை இவ்விஞ்ஞானியைப் பற்றி ஆங்கிலத்தில் நாவல் உட்பட அதிக புத்தகங்கள் வெளி வந்திருந்தாலும் தமிழ் கூறும் நல்லுலகுக்கு இது புதியதே.
இப்புத்தகத்தைப் படிக்க அறிவியல் ஞானம் அவசியமில்லை என்பது வாசகர்களுக்கான கூடுதல் தகவல்.
பேரா.பீ.கலீல் அஹமது அவர்கள் அடிப்படையில் இயற்பியல் துறையை பின்புலமாக கொண்டவர். இவரின் எழுத்துக்கள் அறிவியலை வரலாற்றின் வழியே தேடுவதை மையமாகக் கொண்டவை. மேலும், எழுதப்படாத அறிவியல் வரலாற்றை நிரப்பும் வகையிலும் அமைந்துள்ளன. மிக எளிமையான. நேர்த்தியான நடை, வாசிப்பை எளிமையாக்கி வாசகனுக்கு அருகில் கொண்டு செல்கின்றன. இணைய வழியிலும் எழுதும் இவருக்கு இந்நூல் இரண்டாவது படைப்பாகும்.
Be the first to rate this book.