ஆட்சிக்கு தனது பெயரை வைக்காமல் ஒரு கொள்கையின் பெயரை வைத்தார்.
ஒரு கட்சியின் அரசு அல்ல, ஒரு இனத்தின் அரசு என்று சொன்னார்.
வாக்களித்தவர்க்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்குமான ஆட்சியை அமைப்பதாகச் சொன்னார்.
சொன்னபடி நடந்தார்.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார்.
அறிவிக்காத திட்டங்களையும் அமல்படுத்தினார்.
இதன் மூலமாக 2021-25 காலக்கட்டத்தில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக தலைநிமிர வைத்துள்ளார் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்.
***
ஒரு அறிவிப்பை, அதன் விளைவுகளின் மூலமாக ஆராய்கிறார் ப.திருமாவேலன்.
ஒரு முதலமைச்சரை, அவரது உள்ளார்ந்த ஈடுபாடுகளின் மூலம் வரையறுக்கிறது இந்நூல்.
அரசாங்கத்தின் கோப்புகள் வெறும் காகிதங்கள் அல்ல, அவை கொள்கையின் வேர்கள் என்பதை அளவிடுகிறார் இத்தொகுப்பாளர்.
எண்ணிக்கைகள் மூலமாக எண்ணங்கள் நிறைவேற்றிய ஒரு முதலமைச்சரின் முழுமையான தோற்றத்தை 192 பக்கங்களில் பார்க்கலாம்.
Be the first to rate this book.