என் வாழ்வில் பாதியை ஒரு பேரரசனாகவும், மீதியை பிச்சைக்காரனாகவும் வாழ்ந்திருக்கிறேன். எப்படிப் பார்த்தாலும் கடந்த காலம் ஒரு துன்பக்கேணிதான். எதிர்காலமோ அச்சத்தையும் பீதியையும் மட்டுமே தரக்கூடியது. ஆதலினால், எப்போதும் இந்தக் கணத்திலேயே வாழும் வகையைக் கற்றுக் கொண்டேன். ஆனால் மொழி என்ற இந்த நூல் என் சுயசரிதம். இதைச் செப்பனிடும் பொருட்டு, கடந்த காலத்தின் சாளரத்தைத் திறக்க வேண்டியதாயிற்று. பெரும் கொண்டாட்டத்தையும், சொல்லவொண்ணா வாதையையும் ஒருங்கே அனுபவம் கொண்டேன். இந்த இடத்தில் பாப்லோ நெரூதாவின் ode to the Present என்ற கவிதை ஞாபகம் வருகிறது. அதன் முக்கியமான பகுதி இது: You are your present, your own apple, pick it from your tree. Raise it in your hand. It's gleaming, rich with stars. Claim it. Take a luxurious bite out of the present, and whistle along the road of your destiny. இந்த நூல் உங்கள் கரங்களில் தவழும் ஆப்பிள். இதை புசித்துப் பாருங்கள்.
-சாரு நிவேதிதா
Be the first to rate this book.