இதிலிருக்கும் குறுங்கதைகளும் நுண்கதைகளும் வாசகனின் கற்பனையைத் துணைக்கு அழைத்துக்கொள்கிற சில அடிப்படை விதிகளை வைத்திருக்கின்றன. வெவ்வேறு மொழிதல் முறைகளை, இக்கதைகளில் முயன்றிருக்கிறார் தூயன்.
தூயனின் சொற்களும் நுட்பமான விவரணைகளும் மாலையில் கொட்டித் தீர்க்கும் பெருமழைபோலவும் பல்கிப் பெருகிய தீயின் கங்கெனவும் தணலாய்த் தகிக்கிறது ஒரே சமயத்தில். தூயன் கதை சொல்லும் பாங்கு, அவருக்கேயுரிய தனித்துவமுடையது.
தனித்துவமுடைய ஒரு மலரின் ஒற்றை இதழின் அழகை, அதன் நிறம், தன்மை, வடிவம் எனப் பலவாக விரித்து விரித்துப் பெருக்கியபடியே செல்லலாம், அதுபோல விதவிதமான காலங்களை அணுவுள் அணுவெனப் பொதித்துக்கொண்டே போய் வடிவமாக்குவதுபோல, நீர்த்துளிக்குள் பிரவாகத்தைக் காட்டும் முயற்சியே இக்குறுங்கதைகள்.
- தி. பரமேசுவரி
Be the first to rate this book.