இப்போதும் ஒரு போர் தொடங்கி நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. இது முகத்துக்கு முகம் பார்த்து மோதாத போர் ஆயுதங்களை ஒளித்துக் கொண்டு நிகழ்த்தும் போர்; மண்ணுக்கும் விண்ணுக்குமான போர்; மனிதனுக்கும் இயற்கைக்குமான போர். இது மனிதகுலம் சந்தித்திராத மோசமான முகமூடிப் போர்: புவி வெப்பமாதல் உலகமயமாதல் என்ற இரண்டு சக்திகளும் வேளாண்மைக்கு எதிராகத் தொடுத்திருக்கும் விஞ்ஞானப் போர்.
“இந்தப் படைப்பை விவசாயி மகனாக இல்லாத ஒருவன் ஜீவனுள்ளதாக எப்படிச் செய்ய முடியும்? மூன்றாண்டுகள் ஆராய்ந்தேன்; பத்துமாதங்கள் எழுதினேன். எங்கள் மண்ணின் மக்கள் ஊடாக உலகத் துயரத்தை பதிவு செய்தேன்.”
“இந்தப் படைப்பு உள்ளூர் மனிதர்களின் நாவினால் பேசப்படும் உலகக் குரல்; விழ வேண்டிய செவிகளில் விழுந்தாக வேண்டும். வாசிப்பு – ரசிப்பு என்ற எல்லைகளைத் தாண்டி , தீர்வுகளையே பரிசாகக் கேட்கிறது இந்தப் படைப்பு."
“வேளாண்மையைக் காப்பது உலகக் கடமை. அந்த உலகக் கடமையின் தமிழ்ப் பங்குதான் இந்த மூன்றாம் உலகப் போர்."
- வைரமுத்து
Be the first to rate this book.