புனிதங்கள் பகடி செய்யப்படுகின்றன; அதிகாரம் உருவாக்கிய பிம்பங்கள் உடைக்கப்படுகின்றன; மனிதன் மையமாக நிற்கும் அமைப்புகள் கேள்விக்குள்ளாகின்றன. இங்கு கதைகள் நேரடி பதில்களை வழங்குவதில்லை, அதேநேரம் அவை வாசகனை அசௌகரியப்படுத்தி, சிந்தனையைத் தள்ளி, பழகிய பார்வைகளை மீளப் பரிசீலிக்க வைக்கின்றன. மனித இருப்பின் பதற்றங்களையும், கனவுக்கும் நனவுக்கும் இடையிலான மெல்லிய கோட்டையும் ஒரு மின்மினிப் பூச்சியின் வெளிச்சம்போல வாசகனின் மனதில் நிலைநிறுத்துகிறார் ஆசிரியர். தற்காலத் தமிழ் இலக்கியத்தின் பரீட்சார்த்தமான முயற்சிகளில் இது ஒரு முக்கியமான வரவு.
Be the first to rate this book.