பொதுக்கூட்டங்களில் பேசும் போது உங்களுக்கு அச்சம் தோன்றினால், மக்கள் முன் பேச எழுந்து நின்றதும் ஒருவிதமான பதட்டம் வந்து உங்களை இறுகப் பற்றிக் கொண்டால் இதுதான் உங்களுக்கான சரியான புத்தகம். இதில் உங்கள் அச்சத்தையெல்லாம் விரட்டியடிக்கவல்ல திறவுகோல் இருக்கிறது.
"பார்வையாளர்களின் முன்னால், அமர்ந்து கொண்டு உரையாற்றுவதைப் போல, நேராக நின்று கொண்டும். அதேசமயம் சிந்தித்தும் பேச முடியாது என்பதற்கான காரணத்தின் சாயல் மிக லேசாகவாவது இருக்கிறதா என்ன? உங்களுக்கே தெரியும் அப்படி இல்லை என்று."
இந்தப் புத்தகம் நீங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, வெற்றிகரமான மேடைப்பேச்சாளராக வருவதற்கும், நினைவாற்றலின் மற்றும் திறமையாக உரையாற்றுவதன் ரகசியம் என்ன என்றும், நினைவாற்றலுக்கான இயற்கை விதிகள் மற்றும் வெற்றிகரமான பேச்சாளராவதற்கான முக்கியமான கூறுகள் என்பவற்றையும், சொற்பொழிவை நன்கு கேட்பவர்களின் ஆர்வத்தைத் தூன்டும் வகையில் துவங்குவது எப்படி, இன்னும் கேட்க வேண்டும் என்னும் அவா ஏற்படும் வண்ணம் நிறைவு செய்வது எப்படி என்னும் பல அற்புதமான விவரங்களை உள்ளடக்கியது.
புகழ் பெற்ற மாபெரும் பேச்சாளர்கள், தங்கள் உள்ளுணர்வின் துணையுடனும் காலத்தை வென்ற யுக்திகளைக் கொண்டும் எவ்வாறு தங்கள் உரைகளைத் தயாரித்தார்கள் என்பவற்றை விவரிக்கும். 'டேல் கார்னகியின் "மேடைப்பேச்சின் மூலமாகத் தன்னம்பிக்கையை வளர்ப்பதும் மக்களின் செல்வாக்கைப் பெறுவதும் எப்படி" என்னும் இந்தப் புத்தகம், மக்களுக்கு, நம்பிக்கையுடனும் பயனுள்ள முறையிலும், திறமையாகவும் பேசுவதற்கு. தொடந்து பேருதவி புரியும் கருவியாக இருந்து வருகிறது.
Be the first to rate this book.