வெயில் தணிந்த பின் போகச் சொல்வார்கள்.
மழை நின்ற பின் போகச் சொல்வார்கள்.
எதுவும் தணியுமுன் எதுவும் நிற்கு முன் போய்க்கொண்டே இருங்கள்.
உங்கள் நெற்றியும் கன்னமும் மழை விழுந்து தெறிக்கும் படியும் உங்கள் புறங்கைகளின் மேல் தோல் வெயிலில் பிசுபிசுக்கும் படியும் தரப்பட்டிருக்கின்றன.
குடை வைத்திருக்கும் பைத்தியக்காரர்களை இதுவரை யாரும் பார்த்திருக்கிறோமா?
Be the first to rate this book.