கல்வி, வேலை வாய்ப்பு, சமூக அந்தஸ்து போன்றவற்றில் முன்னேற முடியாமல், நடுத்தர வாழ்வின் அநியாயமான சமரசங்களுக்குள் சிக்கிச் சிதையும் கோடான கோடிப் பெண்களில் ஒருத்தி மெய்யாசி. விடியலை நோக்கி இந்த மெய்யரசிகள் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியையும் சமூகக் கற்பிதங்கள் எனும் இருள் பின்னுக்கு இழுக்கிறது.
இந்த நாவலின் கதாபாத்திரங்கள் ரத்தமும் சதையுமாக நம்முடன் வாழும் மனிதர்களை எவ்வித மேற்பூச்சும் இன்றி அப்படியே பிரதிபலிக்கின்றன. உறவுமுறை எனும் போர்வையில் பெண்களுக்கு நிகழும். நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் கொடூரங்களை, அவற்றின் தீவிரம் குறையாமல் எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார் ஜெயந்தி கார்த்திக்.
Be the first to rate this book.