விளாடிமிர் நபக்கோவின் இச்சிறுகதைகள் உண்மையில் அடர்த்தியும் செறிவும் கொண்டவை. அவை வாழ்வின் சிக்கலான போக்கைத் தொடர் தேடுதலுக்கு உட்படுத்துபவை. நபக்கோவின் சிறுகதைகளில் இடம் பெறும் புகலிட மாந்தர்களின் மனச் சிக்கல்கள், வேதனைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவற்றை அவர் தன் சொந்த அனுபவத்திலிருந்து வெளிப்படுத்தியதால் அவற்றில் ஒளிரும் உண்மைத்தன்மை, கற்பனை என்னும் வெளிறிய நிழலைப் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது. தன் குரல் தனித்தும் சிறப்பாகவும் ஒலிக்கவேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்த சொற்களின் உக்கிரத்தோடு அவர் கதைகளை நகர்த்திச் செல்வதிலிருந்து ஒரு வாசகர் உய்த்துணர முடியும். நபக்கோவ் படைப்புகளின் நடையும் உள்ளடக்கமும் எளிதானது என்னும் வரையறையை மீறிச் சென்று ஒருவர் தனது வாசக அனுபவத்தின் திறனைப் பரிசீலித்துக் கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது. நபக்கோவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளைக் கொண்ட இத்தொகுப்பு இதுவரை தமிழ் வாசகர்கள் கண்டறியாத ஒரு புதிய உலகத்துக்கு அவர்களை அழைத்துச் செல்கிறது!
(1899 – 1977)
ரஷ்ய-அமெரிக்க எழுத்தாளரான விளாடிமிர் நபக்கோவ், இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற நாவலாசிரியர்களில் ஒருவராகக் கொண்டாடப்படுபவர். ரஷ்ய மொழியில் தன் இலக்கிய வாழ்வைத் தொடங்கி, பின்னர் ஆங்கிலத்தில் ‘லோலிதா’ (Lolita), ‘பேல் ஃபயர்’ (Pale Fire), ‘அடா’ (Ada) போன்ற உலகப்புகழ் பெற்ற நாவல்களைப் படைத்தவர்.
Be the first to rate this book.