இத் தொகுப்பை முன்வைத்து சங்கப் பெண் கவிகளின் இன்றைய நீட்சியெனக் கயலையும் இவரது கவியுலகையும் தாராளமாக அடையாளப்படுத்தலாம். ஆண்டுகள் ஈராயிரத்துக்கு முன்பாகக் கவியாக்கமடைந்த அதே ஆதிக் காதலுணர்வு, குருதிவழி பயணித்துக் கவியாகத் திரண்டு இந்நூற்றாண்டின் கொடையாகியிருக்கிறது. மரபில் வேர் பாய்ச்சி, சமூகப் பார்வையில் கிளை பரப்பி, நவீனத்துவத்தின் கனியை அளிப்பதான கவிதை விருட்சத்தை நமக்குக் கையளித்துள்ளார் கயல்.
- ஸ்ரீ நேசன்
Be the first to rate this book.