தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் பல்வேறு மேடைகளில் ஆற்றிய உரைகள் தொகுக்கப்பட்டு ‘மேடைத்தென்றல்’ என்ற ஆவணமாக வெளிவருவது மகிழ்ச்சிக்குரியது. மொழியை கவிதையைப் போலவும் கற்கண்டைப் போலவும் கையாளும் அவருடைய திறனில் ஒரு தென்றல் நம்மை வருடிச் செல்வதைப் போன்ற உணர்வு ஒவ்வொரு வரியிலும் ஏற்படுவது உண்டு. அவர் குரலில் அத்தகைய மென்மை மேவுவதை நாம் உணர்ந்து சிலிர்க்க முடியும். அதனால் நூலின் தலைப்பு சாலப்பொருந்தும் ஒன்று.
அடிகளாருடைய உரையில் தமிழ்ப் பாடல்கள் தடையின்றி நர்த்தனமாடும். கருத்துகள் உருண்டோடும். அதே நேரத்தில் சந்நிதானம் என்கின்ற எந்தவித இறுக்கமும் இல்லாமல் நகைச்சுவைக் கதைகள் கூறும் செய்தியை சுவையூட்ட ஆங்காங்கே தூவப்படும். பல புத்தகங்களை வாசித்த திருப்தியை அவருடைய உரை தருவதோடு மேலும் நம்மைத் தேட வைக்கும் வித்தையையும் செய்யும்.
மேடைத் தென்றல் வீசிய பின்பும் அதன் தாக்கம் உள்ளங்களைத் தொடர்ந்து மலர வைத்து நறுமணம் கமழச் செய்யும் சிந்தனை விருந்து.
-முனைவர் வெ. இறையன்பு (இ.ஆ.ப)
Be the first to rate this book.