உலகமே கதைகளின் வழியாகத்தான் எனக்கு அறிமுகமானது. தந்திரக்காரத் திருடர்களும், சித்திரக் குள்ளர்களும், சூன்யக்காரிகளும், ஒற்றைக் கண் மந்திரவாதிகளும் எத்தர்களும் ஏமாற்றுக்காரர்களும் ஆறு தலைப் பன்றிகளும் எனப் பலரும் கதைகளின் மூலம் எனது நினைவுப்புலத்தில் மிதந்தனர். வானத்தில் பறந்து போகும் பறவைகளின் நிழல்கள் தரையில் விழுவதுபோல், புனைவின் வாசம் இருக்கிறது. முடிவற்ற புனைவுகள் மனதுக்கு ரம்மியமளிக்கின்றன. அப்புறம் ஒருபோதும் விட்டு விலகமுடியாத புனைவுப் பள்ளத்தாக்கினுள் விழுந்து விட்டேன். இன்றுவரை புனைவுலகில் பயணிப்பதிலிருந்து விடுபட முடியவில்லை. கதைகள் இல்லாத உலகில் வாழ்வதை என்னால் கற்பனை செய்ய இயலவில்லை.
-ந.முருகேசபாண்டியன்
Be the first to rate this book.