நீங்களும் நானும் மழை நாட்களில், காதல் பருவங்களில், கோடை வெயிலில், பிரிவின் வலியில் அனுபவித்திருந்த, நினைத்துப் பார்த்திருந்த சிலவற்றை மீண்டும் ஒருமுறை நினைவுக்கூறச் செய்யும் இந்தக் கவிதைகள் எளிமையாக நிச்சயம் மனதுக்கு நெருக்கமாகவே இருக்கும். சும்மா ஒரு ரயில் பயணத்திலோ காபிக் கடையிலோ மொட்டை மாடியிலோ இதைப் படித்து முடிக்கலாம்.
காதலில் மூழ்கியவர்கள் இணையருக்கு படித்துக் காட்டி இரண்டு முத்தங்கள் இலவசமாக பெறலாம்.
மழைப் பிடிக்கும் மனங்கள் வெயிலிலும் மழைக் கவிதைகள் படித்து குளிர்ந்துக் கொள்ளலாம்.
வெயிலில் பிரிவில் தனிமையில் தாபத்தில் இருப்பவர்கள், கிடைக்கும் நேரங்களில் ஒன்றோ இரண்டோ பக்கங்கள் படித்து வைக்கலாம்.
எல்லாக் காலப்பருவங்களிலும் நீங்கள் இதை திறந்துக் கொள்ளலாம்.
Be the first to rate this book.