மே தினம், கம்யூனிஸ்டுக் கட்சியின் ஏகபோக மிராசுப் பாத்யதை அல்ல. மே தினம் கம்யூனிஸ்டுக் கட்சி ஆள வந்த பிறகு ஏற்பட்ட சம்பவமும் அல்ல. மே விழா, ரஷியாவிலே அல்ல முதன் முறையாகக் கொண்டாடப்பட்டது. மேதினி எங்குமே மே தினம் கொண்டாடப்படுகிறது. இதே நேரத்தில், உலகிலே பல்வேறு பட்டணங்களிலே, மே விழா. மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. ஸ்டாலின் பேசிக் கொண்டிருப்பார், மாஸ்கோவில், அதுபோன்ற ஒவ்வோர் தலைநகரிலும், தலைவர்கள் மே தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருப்பர். புரட்சித் தினம். செஞ்சேனைத் தினம் என்ற விழாக்கள் ரஷியாவிலே, விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆனால் அவை அங்கு மட்டுந்தான். உலகிலே வேறு நாடுகள் இந்த விழாக்களை, சோவியத் ரஷியாவுக்கு மட்டுமே சொந்தமான விழா என்று கருதுகின்றன. எனினும் இந்த மே தினத்தை மேதினி எங்கும் உள்ளவர்கள், எமக்கும் அந்நாள் விழாத்தான் என்று உரிமை கொண்டாடும் அளவுக்கு. இன்று பிரபல்யம் அடைந்துவிட்டது. ஆகவே, மே தினம், கம்யூனிஸ்டுகளின் விழா என்று கருதுவதும், அதனைத் திராவிடர் கழகத்தார் கொண்டாட வேண்டிய அவசியமில்லை என்று எண்ணுவதும், சரியல்ல.
-புத்தகத்திலிருந்து
பேரறிஞர் அண்ணா என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை (15 செப்டம்பர் 1909 -3 பிப்ரவரி 1969), திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) நிறுவனர் மற்றும் முதல் பொதுச் செயலாளர். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது மாநிலக் கட்சித் தலைவரும் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார். பெரியாரின் சீடர், சமூக மாறுதலை தன் எழுத்தின் மூலம் முன்னெடுத்துச் சென்றவர். எழுத்து, பேச்சு, நாடகம், புதினம், திரைப்படம் என பல துறைகளில் சாதனை செய்தவர்.
Be the first to rate this book.