குழந்தைமையின் அசல் தன்மையை அப்படியே கொண்டு வந்துள்ள அரிய முயற்சி ரஷ்ய எழுத்தாளர் அர்க்காதிய் கைதாரின் இச் சிறார் நாவல். குறும்புக்காரச் சகோதரர்களான சுக்கும் கெக்கும் காணாமல் செய்த தந்தியால் தாயுடன் அவர்கள் புகைவண்டியிலும், ஸ்லெட்ஜ் வண்டியிலும் நீண்ட தூரம் பயணித்து தைகாக் காட்டில் நிலவியல் ஆராய்ச்சிக் குழு தலைவரும் தந்தையுமான செர்யோகியைத் தேடிச் செல்வதும், யாருமற்ற பனிக் காட்டில் எல்லா வகையிலும் தங்களைத் தற்காத்து, சூழலமைத்துக் கொள்வதுமான அபாரப் படைப்பு இது.
ரஷ்ய வாழ்வில் துணிச்சலும், ஆற்றலும் மிக்க மற்றுமொரு தாய் இதில் உயிர்கொண்டு புத்தொளி வீசுகிறாள். சிறார் இலக்கியத்தின் மிக உயர பனிச்சிகரமான இந்நாவலின் வரிகளைக் கடக்கும்தோறும் மேலே விழுகின்றன சில்லிடும் எழுத்துகளின் பனிச் சிதல்கள்.
Be the first to rate this book.