ஜெயமோகன் தமிழ் இலக்கிய முன்னோடிகள் பற்றி எழுதிய கட்டுரைகள் ஏழுநூல்களாக வெளிவந்தன. பின்னர் முழுநூலாகவும் அவை வெளிவந்தன. அவற்றில் நாலாவது நூல் இது.
இந்நூல் லா.ச.ராமாமிர்தம், க.நா.சுப்ரமணியம், தி.ஜானகிராமன், நகுலன் ஆகியோரைப் பற்றிய முழுமையான பார்வையை உருவாக்கிக்கொள்ள முயல்கிறது. தமிழ் நவீன இலக்கியத்தில் வெவ்வேறு வகையில் ஆழ்ந்த செல்வாக்கைச் செலுத்திய படைப்பாளிகள் இவர்கள். இவர்களைப் புரிந்துகொள்வது தமிழ் நவீன இலக்கியத்தைப் புரிந்துகொள்வதேதான். இளையதலைமுறை வாசகர்களுக்கு ஓர் ஒட்டுமொத்த புரிதலுக்கு இந்நூல் உதவும்.
இலக்கிய விமர்சனம் என்பதும் ஓர் இலக்கிய வகைமையே, இலக்கியப்படைப்புக்குரிய சுவாரசியமான வாசிப்பும், வாசகனின் கற்பனையையும் சிந்தனையையும் தூண்டும் மொழி நடையும் அதற்கும் தேவை என்றும் காட்டும் கட்டுரைகள் இவை.
Be the first to rate this book.