மனவெழுச்சியும் மனச்சோர்வும் மாறி மாறி வரக்கூடிய இருதுருவ மனநிலையுடன் அதீதக் கற்பனைத்திறன் கொண்ட பெண்ணின் மனவோட்டத்தை வெளிப்படுத்தும் நீண்ட சிறுகதைதான் மஞ்சள் சுவர்தாள். தனிமை கற்பனைகளையும் மாயத் தோற்றங்களையும் உருவாக்கும். அதுபோல அறையின் மஞ்சள் சுவர்தாளில் உருவங்களைக் கண்டு, அதில் தன்னைப் போன்றே உள்ள ஒரு பெண்ணைக் கண்டு அவளை விடுவிக்க நினைக்கும் பெண்ணின் மனவெழுச்சியைப் பற்றிய ஆங்கிலச் சிறுகதை. இதனை மிக அழகாக ஆங்கில மூலத்தின் கவித்துவமும் பூடகத்தன்மையும் கெடாமல் மொழிபெயர்த்திருக்கிறார் ஜான்ஸி ராணி. நூறாண்டுகளுக்கு முந்தைய ஆங்கிலக் கதையின் அந்நியத்தன்மையை உணரமுடியாத அளவுக்குச் சரளமாக வாசிக்க முடிகிறது. இது நிச்சயம் தமிழுக்கு வளம் சேர்க்கக் கூடிய படைப்பாகும்.
- டாக்டர் ஜி ராமானுஜம், மனநல மருத்துவர்
Be the first to rate this book.