தேவேந்திர பூபதியின் கவிதைகள் உடனடிச் சமன்பாடுகளின் வழி வாழ்வுபற்றிய அவதானங்களை முன்வைப்பவை. தேர்ந்த சொற்களால் உருவக மொழியில் எழுதப்பட்டவை. நவீன கவிதை தனக்கென்று உருவாக்கிவைத்திருக்கும் மொழியில் பேசுபவை. இடையிடையே மரபின் தொனியிலும் ஒலிப்பவை.
கருத்துகளைக் காட்சிகளாக உருமாற்றித் தரும் முனைப்பு அதிகரிக்கையில், கவிதானுபவத்தில் செறிவும் செழுமையும் கூடுகின்றன. கவிதைக்குள் தானாகச் சொற்சிக்கனம் சேருகிறது. இவை நிகழும்போது சிறந்த கவிதைகள் உருவாகின்றன. இந்தத் தொகுப்பிலுள்ள பல கவிதைகள் அதற்கான சான்றுகள்.
- யுவன் சந்திரசேகர்
Be the first to rate this book.