அவள் ஓர் உலகை ஆளும் சாம்ராஜ்யத்தின் வாரிசு. அவள் ஒரு மர்மமான கடத்தல் வழக்கில் காணாமல்போகிறாள். அவளைத் தேடும் வேட்டை பாண்டிய தேசத்தை உலுக்கும் ஒரு சதியா?
உலகின் மாபெரும் மங்கோலியப் பேரரசின் இளவரசி கோகோ சின், பாண்டிய நாட்டின் காயல்பட்டினத் துறைமுகத்தில் காணாமல் போகிறார்.
அந்நிய வணிகன் மார்கோ போலோவின் முறையீட்டால், இந்த வழக்கை விசாரிக்க இரண்டு பாண்டிய இளவரசர்களும், கடற்படையினர் குடும்பத்தைச் சேர்ந்த, கூரிய புத்தி கொண்ட சாகராதித்தனும் களமிறக்கப்படுகிறார்கள்.
குறைவான நாட்களுக்குள், இளவரசியைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும்.
Be the first to rate this book.