மேற்கத்திய பெண் எழுத்தாளர்களுக்கும் தமிழில் எழுதுபவர்களுக்கும் உள்ள பெரிய வேறுபாடு, அங்கே எழுதுபவர்கள் நான் ஒரு பெண் என்ற உணர்வோடு எதையும் எழுதுவதில்லை. தேவிக்கு அது போன்ற எல்லைக்கோடுகள் ஆரம்பத்தில் இருந்தே இல்லாதது அவருடைய பெரிய பலம். இத்தொகுப்பு மட்டுமல்ல, அவருடைய மொத்தக் கதைகளில் அநேகமாக உறவுச்சிக்கல்களே கருப்பொருள். கடைசிக்கதை அதிலிருந்து விலகிய கதை; அதனாலேயே நூறு சீருடைகளுக்கு நடுவில் நின்ற பட்டுப்பாவாடை போல் பளிச்சென்று தெரிகிறது. கதைகளுக்குக் குறைவில்லை தேவியிடம்.
- சரவணன் மாணிக்கவாசகம்
Be the first to rate this book.