பொதுவாகவே மருத்துவம் பற்றிய நூல்கள், அதிலும் மனநல மருத்துவம் பற்றிய நூல்கள் சுவாரஸ்யமாக இருப்பதில்லை. ஆனாலும் இக்காலத்தில் இவை பற்றிய ஓர் அடிப்படை அறிவு அனைவருக்குமே இன்றியமையாதது. எனவே மனநல மருத்துவம், மனநோய்கள் குறித்து ஒரு நூலைச் சாதாரண மக்களின் உரையாடலாகப் பேச்சுத் தமிழிலேயே எழுதலாம் என்னும் கருத்து எழுந்தது. இந்நூல் உண்மையிலேயே வித்தியாசமான ஒன்று என்பதை நீங்கள் இதைப் படிக்கத் தொடங்கிய உடனேயே உணர்வீர்கள் என்பது நிச்சயம். இந்நூலாசிரியர் மனநல மருத்துவர் டி.ஆர்.சுரேஷ் நாற்பதாண்டுகால மனநல மருத்துவ அனுபவமுள்ளவர் மட்டுமல்ல, பல மருத்துவ, இலக்கிய நூல்களின் மொழி பெயர்ப்பாளர். மாநில அரசும், கம்பன் கழகமும் இவரது நூல்களுக்குப் பரிசளித்துள்ளன. படியுங்கள்! புதிய அனுபவம் பெறுங்கள்!
Be the first to rate this book.