அண்ணாவின் கலைப்பணி உயர்ந்ததா, அரசியல் தொண்டு உயர்ந்ததா, எனவும்-அண்ணாவின் சமுதாயக் கொள்கை உயர்ந்ததா, அரசியல் கொள்கை உயர்ந்ததா எனவும் அண்ணாவின் மேடைப் பேச்சு வல்லமை மிக்கதா, அவர் தீட்டிய எழுத்து வல்லமை மிக்கதா எனவும்- அண்ணாவின் பெரும்புகழுக்குக் காரணம் அவரது பேரறிவா, அன்றி அவரது தியாகமா, அன்றி அவரது சமுதாயத் தொண்டா எனவும்-இன்று பட்டிமன்றங்களிலே விவாதிக்கப்படுகின்றன. அண்ணா அவர்களின் அறிவு பரந்துபட்டது; தெளிவு பளிங்கு போன்றது; சிந்தனை ஆழமானது; தமிழ்ப் புலமையும் ஆங்கிலத் தேர்ச்சியும் ஒப்பற்றவை. அவற்றை அவர் பயன்படுத்திய வகையும் மிகப் பல, அவை அனைத்தும் இந்த நாட்டு மக்களுக்காக - தமிழ்ச் சமுதாயத்திற்காக. ஆம். அப்படிப்பட்ட அண்ணாவின் அருமை பெருமைகளை மக்கள் புரிந்துகொள்ள எதுவாகப் பட்டிமன்றம் நிகழும் காலமெல்லாம் அதில் இடம் பெறும் ஒரு பொருளாக, கருத்துக் கருவூலமாக-தத்துவமாக அண்ணா விளங்குவார்! வாழ்க அண்ணா! வளர்க அண்ணாவின் நெறி!
-புத்தகத்திலிருந்து
Be the first to rate this book.