18-ம் நூற்றாண்டில் ஆண் வேடமிட்டு கடற்பயணம் மேற்கொண்ட பெண் ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்ட காகித மலர், உலகின் முதல் பொருளாதார குமிழிவெடிப்புக்கு காரணமாயிருந்த ட்யூலிப் மலர்மீதான பித்து, உலகின் மிக மோசமான களைகளில் ஒன்றாகவும் அழிக்கவே முடியாத நச்சுக்களையாகவும் மாறிவிட்டிருக்கும் அழகிய வெண்ணிற மலர்களைக் கொண்ட பார்த்தீனியம், பல சுலாசாரங்களுடன் இணைந்திருக்கும் எனக்கு மலர், 12 வருடக் காலக் கணக்கை நினைவில் கொண்டிருக்கும் நீலக்குறிஞ்சி, மிகையாக மலர்ந்து உடனே அழிந்துவிடும் மூங்கில், இவற்றோடு குங்குமப்பூ. கருவிளைமலர், வெனிலா, ஜப்பானியக் கலாசாரத்தின் முக்கிய அங்கமான இசுபானாவின் வரலாறு உள்ளிட்ட பல மலர்களின் வரலாறு. சூழல் மற்றும் கலாசார முக்கியத்துவங்களைச் சுவாரஸ்யமாகவும் அறிவியல் அடிப்படையிலும் சொல்லும் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த மலர்ப்பித்து. முனைவர் லோகமாதேவியின் எட்டாவது கட்டுரைத் தொகுப்பு இது.
Be the first to rate this book.