பிள்ளையைப் பெற்றெடுத்தல் என்பது வலி மிகுந்த நிகழ்வு, அது உயிர் போய் உயிர் மீளும் ஆபத்தான. ஆனால் பெண் கடந்தே ஆகவேண்டிய கட்டாய நிகழ்வு என்ற படிமம் ஒட்டுமொத்த சமூகத்தினுள்ளும் படிந்துள்ளது. அப்படிமத்தை வெந்த முட்டையிலிருந்து மேலோட்டைப் பிரிப்பது போலக் களித்துவமாக நளினமாகப் பிரித்தெடுக்கிறார் மீரா.
குழந்தையைப் பிறப்பித்தபின் பெண் மறு உயிர் எடுக்கிறாள் என்பது உண்மைதான். ஆனால் அது உயிரைப் பணயம் வைத்து மீட்பதல்ல. பெண்ணுடலின் ஒவ்வொரு உயிரணுவும் நன்ளைப் புதுப்பித்துக் கொள்ளும் உயிரியல் நிகழ்வு. அதுவோர் சுகானுபவம். தனது மூன்றாவது பேற்றின்போது குழந்தை வெளி வந்த நொடியில் தனது தலைப்பகுதியில் உச்சமான வெடிப்பு நிகழ்ந்ததைப் போலவும், பின்னர் அரை மயக்க நிலையில் உடல் தளர்ந்திருக்கத்தான் பெருவெளியில் நட்சத்திரங்களிடையே உலவிக் கொண்டிருந்ததாகவும் உணர்ந்ததை இந்நூலில் பதிவு செய்துள்ளார் மீரா.
Be the first to rate this book.