தோழர் வெற்றிச்செல்வன் மூலம், நண்பர் செங்கை சிலம்புவின் மகடூஉக்கு மகுடம் என்னும் நூல் கிடைக்கப் பெற்றேன்.
ஆடூஉ, மகடூஉ என்னும் சொற்கள் ஆணையும், பெண்ணையும் குறிப்பதற்குப் பழம் இலக்கியங்களில் பயன்படுத்தப் பட்டன. ஆனால் அந்தச் சொற்கள் செய்யுள் வழக்கைத் தவிர, இன்று நடைமுறையில் பயன்படுத்தப்படுவது இல்லை. எனவே இந்த நூல், பழந்தமிழ் இலக்கியம் பற்றியதோ என்று முதலில் கருதினேன்! மாறாக, பாலினச் சமத்துவம், பெண்களைப் பற்றிய வரலாறு, இந்தியச் சமூக நிலை, இன்று புதிதாகப் பெண்களுக்காக இயற்றப்பட்டுள்ள சட்டங்கள் ஆகிய பலவற்றைப் பற்றியும் இந்நூல் பேசுகிறது.
-பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தலைவர்,
திராவிட இயக்கத் தமிழர் பேரவை.
Be the first to rate this book.