சலீம் தனது நாவல்களின் மையக் கதாபாத்திரங்களுக்கு நுணுக்கமான, தெளிவான ஒரு உலகத்தை உருவாக்குகிறார். அக்கதாப்பாத்திரங்களின் புற வாழ்க்கையைத் தாண்டி, உள்மனத்தின் ஆழங்களில் ஊடுருவி, கடந்த காலத்தை நோக்கி திரும்புவதன் மூலம் உள்ளார்ந்த உண்மைகளை வெளிக்கொணர்கிறார். “நினைவு” என்பதே அவரது அனைத்து நாவல்களிலும் மையக் கருவாக விளங்குகிறது. அந்த நினைவு, கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் ஒன்றோடொன்று பின்னிப்பிணையச் செய்யும் ஒரு நுண்ணிய சரடாக அமைகிறது. நிகழ்காலம் என்பது மனிதன் அதில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் அளவிலேயே அர்த்தமடையும்.
Be the first to rate this book.